ஸ்ரீரங்கம் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 13ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ஸ்ரீரங்கத்தில் பிரசாரம் செய்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் அங்கு வந்தார்.
அப்போது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தா.பாண்டியனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.