சென்னையில் முதல்முறையாக சுரங்கத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்
தமிழகத்தில் முதல் முறையாக, சுரங்கப் பாதையில் சென்னை கோயம்பேடு முதல் ஷெனாய் நகர் வரையிலான சுரங்க வழித்தடத்தில் மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. மெட்ரோ ரயில் அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தியுள்ளனர்.
ஒரு ரயில் பெட்டியுடன் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு, கோயம்பேட்டில் இருந்து திருமங்கலம், அண்ணாநகர், ரவுண்டானா வழியாக ஷெனாய் நகருக்கு மெட்ரோ ரயிலை அதிகாரிகள் இயக்கி ஆய்வு நடத்தினர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 2 வழித்தடங்களில் அமைக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயிலுக்கான பாதைகள் போடப்பட்டு, இந்த வழித்தடத்தில் கடந்த ஆண்டு ஜூன் 29 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது.
மெட்ரோ ரயில் சேவை சென்னையில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து இரண்டாவது வழித்தடத்தின் சோதனை ஓட்டமும் நடந்துள்ளதால் மிக விரைவில் இந்த பாதையில் ரயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.