shadow

ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய தீவிரவாதிகள். விடிய விடிய துப்பாக்கி சண்டை
army
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய எல்லை வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் அவ்வப்போது நடந்து வருவதும், அவர்களை இந்திய ராணுவம் தாக்கி திருப்பி அனுப்புவதும் அவ்வப்போது நடைபெறும் நிகழ்ச்சியாக உள்ளது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் பெரும் நாசத்தை ஏற்படுத்தும் திட்டத்துடன் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அந்த பகுதிக்கு உடனடியாக பாதுகாப்பு படையினர் விரைந்தனர்.

நேற்று பிற்பகல் ஷேக்புரா பகுதியை தீவிரவாத தடுப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு படையினர் கொண்ட கூட்டுக்குழுவினர் தீவிரவாதிகளை சுற்றிவளைத்து அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். இருதரப்புகளுக்கும் இடையே பலமணி நேரம் சண்டை நீடித்தது.

விடிய, விடிய நடைபெற்ற இந்த துப்பாக்கி சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகவும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்னும் அந்த பகுதியில் இரு தரப்பினர்களுக்கு இடையே துப்பாக்கி சூடு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply