நைஜீரியாவின் வட கிழக்கு பகுதியில் குஜ்பா என்ற இடத்தில் வேளாண் கல்லூரி உள்ளது. நகர பகுதியிலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் ஒதுக்குபுறத்தில் இந்த கல்லூரி உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று காலை திடீரென துப்பாக்கியுடன் வந்த தீவிரவாதிகள், ஒரு வகுப்பறைக்கு சென்றனர்.

அங்கு சரமாரியாக சுட்டனர். இதில் பயங்கர சப்தம் கேட்டது. இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விபரம் தெரியவில்லை. 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்திருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கல்லூரியின் நிர்வாக தலைவர் மொலிமோ இடி மோட்டோ வருத்தம் தெரிவித்தார்.

Leave a Reply