மார்ச் 31ம் தேதி வரை மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு: முதல்வர் அதிரடி
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
குறிப்பாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் மகாராஷ்டிரா, பீகார், ராஜஸ்தான், டெல்லி போன்ற மாநிலங்களில் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, தற்போது அது கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்கள் சற்று முன்னர் மார்ச் 31ம் தேதி வரை தெலுங்கானா மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் இதற்கு மக்கள் ஒத்துழைப்பு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்
கொரோனா வைரஸை பரவாமல் தடுப்பதற்கு மக்களை வீட்டில் முடக்கி கிடக்க வைப்பது ஒன்றே வழி என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.