திருப்பதி தொகுதியின் தெலுங்கு தேச எம்.எல்.ஏ. வெங்கட்ரமணா கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென மரணம் அடைந்ததை யொட்டி அந்த தொகுதிக்கு கடந்த 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடந்தது.
தெலுங்கு தேசம் வேட்பாளராக மறைந்த வெங்கட் ரமணாவின் மனைவி சுகுணாவும், காங்கிரஸ் வேட்பாளராக ஸ்ரீதேவியும் போட்டியிட்டனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படாததால் தெலுங்கு தேசம், காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவியது.
இந்நிலையில் இந்த தொகுதியில் பதிவான வாக்குகளின் ஓட்டு எண்ணிக்கை இன்று நடந்தது. தொடக்கத்தில் இருந்தே தெலுங்கு தேச வேட்பாளர் சுகுணா முன்னிலை பெற்று வந்த நிலையில் 7வது சுற்று முடிவில் அவர் காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீதேவியை விட 44,882 ஓட்டுகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கின்றார். இதனால் தெலுங்கு தேசம் வேட்பாளர் சுகுணாவின் வெற்றி உறுதியாகிவிட்டதாக கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.