shadow

தெலுங்கானா மாநிலத்தில் ஒரு நக்சலைட் அதிரடி கைது: ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன

தெலுங்கானாவின் முதல்வராக சந்திரசேகர ராவ் அவர்கள் பதவியேற்றதில் இருந்தே நக்சலைட்டுகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறார். அவ்வப்போது நக்சலைட்டுகள் கைது செய்யப்படுவதும், என்கவுண்டரில் சுட்டுத்தள்ளுவதுமான நிகழ்வுகள் அம்மாநிலத்தில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பத்ரத்ரி கொத்தகுடம் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் நடமாடுவதாக வந்த ரகசிய தகவலை அடுத்து போலிசார் அந்த பகுதியில் வேட்டையை தொடங்கினர். என்கவுண்டர் நடத்தவும் தயாராக இருந்த நிலையில் சிதாராம் வனப்பகுதியில் ஒரு நக்சலைட் நீண்டநேர துப்பாக்கி சண்டைக்கு பிறகு பிடிப்பட்டார். அவரை போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த நக்சலைட்டிடம் இருந்து இரண்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டு வருவதாகவும், அவரிடம் செய்த விசாரணையின் அடிப்படையில் நக்சலைட்டுகளின் இருப்பிடம் குறித்த தகவல் தெரிய வந்துள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply