சென்னையில் டிசிஎஸ் நிறுவன பெண் ஊழியர் கொலை வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த கொலை தொடர்பாக மேற்குவங்கத்தை சேர்ந்த இரண்டு கட்டிட வேலை செய்யும் கூலித்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகிய இருவர் இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் இருவரும் கொடுத்த வாக்குமூலத்தின்படி, மரணம் அடைந்த உமா மகேஸ்வரி இரவில் தனியாக நடந்து வந்தபோது அவரை மடக்கி புதரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, கத்தியால் குத்தி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டர். இவர்களுடைய கூட்டாளிகள் இருவர் மேற்கு வங்கத்திற்கு தப்பிவிட்டதாகவும், அவர்களை பிடிக்க தனிப்படை மேற்குவங்கம் விரைந்துள்ளதாகவும் சென்னை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் கல்பாக்கத்தில் உள்ல அவர்களுடைய நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்ததாகவும், உமா மகேஸ்வரியின் செல்போனை அவர்கள் திருடி சென்றதால் அந்த செல்போன் சிக்னல் மூலம் கொலையாளிகள் பிடிபட்டனர் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply