2வது நாள் விற்பனை ரூ.122 கோடி

டாஸ்மாக் மதுக்கடைகளில் 2 வது நாளில் ரூ.122 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து டாஸ்மாக் மதுக்கடை திறந்த 2 நாட்களில் சுமார் ரூ.294 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

2 வது நாளில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.32.45 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி மதுபானக் கடைகள் அடைக்கப்படுவதாகவும், சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் என்றும், அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply