மதுவிலக்கு போராட்டத்தால் வெட்ட வெளிச்சமான தலைவர்களின் சிகரெட் சீக்ரெட்டுக்கள்
கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல அரசியல் கட்சிகளால் நடத்தி வரப்படும் மதுவிலக்கு போராட்டத்தால் சிகரெட் மீதும் தடை விதிக்கப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி வருகிறது. மேலும் இந்த போராட்டத்தின் காரணமாக வைகோவின் மகன் பிரபல சிகரெட் நிறுவனத்தின் டீலர் என்பதும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
சென்னை சத்தியமுர்த்தி பவனில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் “நானும் சிகரெட் பிடிப்பேன். தற்போது அந்த பழக்கத்தில் இருந்து விடுவிக்க முயற்சித்து வருகிறேன்’ என்று கூறியதோடு மதுவை போல புகைப்பழக்கத்தையும் ஒழிக்க வேண்டும் என்ற கருத்து வரவேற்கத்தக்கது என்றும் கூறினார்.
மேலும் மதுவிலக்கு உடனடியாக சாத்தியமில்லை என குஷ்பூ வெளியிட்டுள்ள கருத்து அவரது சொந்த கருத்து என்றூம் அவரும் படிப்படியாக மதுவிலக்கு வேண்டுமென்பதைதான் வலியுறுத்துகிறார் என்று கூறிய இளங்கோவன், மதுவிலக்கு போராட்டத்தை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்க கூடாது என்றார். மேலும் மதுவிலக்கு போராட்டத்தை தி.மு.க.வோடு இணைந்து போராடுவதில் தப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே டாஸ்மாக் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தனதுமகன் வையாபுரி சிகரெட் ஏஜென்சி நடத்துவதாக ஒப்புக்கொண்டதோடு தமிழக அரசு சிகரெட்டை தடை செய்வது குறித்து கொள்கை வடிவில் முடிவெடுத்தால் தனது மகன் சிகரெட் ஏஜன்ஸியை விட்டுவிடுவார் என்று கூறியுள்ளார்..
Leave a Reply
You must be logged in to post a comment.