shadow

2018-2019ஆண்டின் தமிழக பட்ஜெட்டின் சிறப்பு அம்சங்கள்

2018-2019ஆம் ஆண்டின் தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ,பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

*தமிழக இந்தாண்டு வருவாய் 1.81 லட்சம் கோடி, செலவினம் ரூ. 2.04 லட்சம் கோடி. வரவை விட செலவு 23,176 கோடி அதிகம். தமிழக நிதி 23,176 கோடி பற்றாக்குறையாக உள்ளது.

* வருவாய் பற்றாக்குறை ரூ. 18370 கோடி. இது இதற்கு முன்பு ரூ. 15000 கோடியாக இருந்தது. கடந்தாண்டு 2.82% நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

* வரி அல்லாத வருவாய் ரூ. 11,301 கோடியாக இருக்கும் என மதிப்பிடு

*2018-19ல் வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இது ரூ. 1,12,616 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.

* 201-18 திருத்த மதிப்பீடுகளின் படி தமிழ சொந்த வரி வருவாய் ரூ. 98,693 கோடி

* ஜிஎஸ்டி வரி அறிமுகத்தால் வணீகம் நிச்சயமற்ற சூழலில் வருவாய் குறைந்துள்ளது.

* 50.80 கோடி முதல்வர் நினைவு மண்டபம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* ரூ. 50.80 கோடி முதல்வர் நினைவு மண்டபம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்க ரூ. 20 கோடி ஒதுக்கீடு.

* எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் முக்கிய நிகழ்வு நடத்தப்படும்.

* 201-18ல் அரசின் கடன் ரூ, 3,14,366 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது.

* 2018-19ல் மாநில அரசின் மொத்த கடன் ரூ. 3,55,845 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

* இந்த நிதியாண்டில் தமிழகத்துக்கு 3000 புதிய பேருந்துகள் வழங்கப்படும்.

* கடந்தாண்டு ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ. 22,394 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ. 25,362 கோடி ஒதுக்கப்படுகிறது.

* மகளிர் சுகாதார திட்டத்தில் சானிட்டரி நாப்கின்கள் வழங்க ரூ. 60.58 கோடி ஒதுக்கீடு

* தமிழ்மொழி மற்றும் பண்பாட்டை பாதுகாக்க தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி விரிவாக்க மையம்

* சென்னையில் வெள்ள தடுப்பு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த ரூ. 2,55.67 கோடி ஒதுக்கீடு
* பிரசிடென்சி மற்றும் ராணி மேரி கல்லூரிகள் புதுப்பிக்க ரூ. 26 கோடி ஒதுக்கீடு

* அம்மா இருசக்கர வாகன திட்டத்திற்கு ரூ. 250 கோடி ஒதுக்கீடு

* அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் வகையில் ரூ 27,205 கோடி ஒதுக்கீடு

* அரசு பள்ளி கட்டிடங்களை மேம்படுத்த, புதுப்பிக்க ரூ. 200 கோடி

* செங்கல்பட்டில் மருத்துவ பூங்கா அமைக்க சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது

Leave a Reply