shadow

வைகோ தேவையில்லாமல் பீதி ஏற்படுத்துகிறார்: தமிழிசை

கர்நாடக மாநிலத்தில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்விற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதியை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் மேகதாது அணை விவகாரம் குறித்து கர்நாடக அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த விஷயத்தில் வைகோ ஆவேசமாக சில கருத்துக்களை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வைகோவின் கருத்துக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் பதிலளித்துள்ளார்.

மேகதாதுவில் அணை கட்ட தமிழக பாரதிய ஜனதா கட்சியும் ஒப்புக்கொள்ளாது என்றும், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய மட்டுமே நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளதாகவும், மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான விஷயத்தை பல்வேறு விஷயங்களுடன் இணைத்து வைகோ பீதி ஏற்படுத்துவதாகவும் தமிழிசை கூறியுள்ளார்.

Leave a Reply