இன்று நடந்த சட்ட பேரவை கூட்டத்தில் மார்க்சிஸ்டு கட்சி சேர்ந்த பெண் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா. தமிழகம் விரைவில் மின் மிகை மாநிலமாக மாறும் என்று தெரிவித்தார். மேலும் முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியின் அக்கறையின்மை, தொலைநோக்கற்ற பார்வை, நிர்வாக திறமையின்மை காரணமாக ஒளிமயமாக இருந்த தமிழகம் இருளில் முழ்கியது. அதிமுக ஆட்சி பொறுபேற்ற பிறகு பல்வேறு நடவடிக்கை காரணமாக அனல் மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் விரைவில் தமிழகம் அதிகமாக மின் உற்பத்தி செய்யும் என்று தெரிவித்தார்.

Leave a Reply