shadow

murderசென்னையில் தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் என்.அக்பர் இன்று காலை நான்கு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதனால் சென்னையில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

தமிழ் மாநில முஸ்லீம் லீக் மாநிலத்தலைவர் என்.அக்பர், இன்று காலை ஐஸ் ஹவுஸ் மசூதிக்கு தொழுகைக்காக சென்று கொண்டிருந்தபோது அவரை நான்கு மர்ம நபர்களால் சுற்றி வளைத்து பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டனர். சம்பவ இடத்திலேயே என்.அக்பர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 33

முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டார் என சென்னை போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.  கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்களை பிடிப்போம் என்றும் போலீஸார் தெரிவித்தனர். என்.அக்பர் கொலை காரணமாக சென்னையில் சில இடங்களில் பதட்டம் நிலவுகிறது. பாதுகாப்புக்காக ஒருசில பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply