இலங்கை அரசு சமீபத்தில் நாட்டிற்கு வெளியே செயல்படும் தீவிரவாத அமைப்புகள் குறித்த பட்டியலை வெளியிட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழ் இனத்தை அழித்தவர்களின் பட்டியலை புலம்பெயர் தமிழமைப்பு வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
மே 18ஆம் தேதி இந்த பட்டியலை லண்டனின் புலம்பெயர் தமிழர் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழினத்தை அழித்தவர்கள் என 12 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் ராஜபக்சே, சந்திரிகா குமாரதுங்கே, ரணில் விக்ரமசிங்கே, சரத்பொன்சேகா உள்பட 12 பேர்களின் பட்டியலை புகைப்படத்தோடு வெளியிட்டு அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் அனுப்பியுள்ளது.
மேலும் இந்த பட்டியலில் ஐ.நாவின் பிரதிநிதி பாலித கோகணவின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருப்பதோடு, ஜப்பான், பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகளுக்கான சிறிலங்காத் தூதுவர்களாக உள்ளவர்களும் இப்பட்டியலில் உள்ளக்கப்பட்டுள்ளமை இலங்கை அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.