tamannaபாரதபிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் கமல்ஹாசன் உள்பட பிரபல நடிகர், நடிகைகள் பங்கேற்று நாட்டை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ் நடிகர்கள் மட்டுமின்றி இந்தி நடிகர்களும் பலர் துடைப்பத்தை கையில் ஏந்தி தெருக்களை சுத்தம் செய்த வண்ணம் இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. பெரிய ஸ்டார்களே துடைப்பத்தை கையில் எடுத்துள்ளதால் தூய்மை குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரபல நடிகை தமன்னாவும், இந்த தூய்மை இந்தியா திட்டத்தில் தன்னை இணைத்துள்ளார். மும்பை லோகந்த் வாலாவில் என்ற பகுதிக்கு நேற்று தமன்னா தனகு குழுவினர்களுடன் வந்து கையில் துடைப்பத்தை ஏந்தி குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.
மேலும் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு சென்று அங்குள்ள மாணவ மாணவிகளுடன் இணைந்து பள்ளியையும் சுத்தப்படுத்தினார். நடிகர் தமன்னாவிற்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிரபல டோலிவுட் நடிகர் ராம்சரண்தேஜா தூய்மை இந்தியா பணியில் ஈடுபட சவால் விட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து சுத்தப்படுத்திய பின்னர் நடிகைகள் தமன்னா, ஹன்சிகா, சமந்தா மற்றும் ராகுல் ப்ரீத்திசிங் ஆகிய நால்வருக்கும் சவால் விட்டதாகவும், அந்த சவாலை தமன்னா ஏற்று நேற்று தூய்மைப்படுத்தும் பணியில் இறங்கியதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.