இந்தியாவின் முக்கிய நகரங்களில் மிகச்சிறப்பாக இயங்கி வரும் டாடா குழும நிறுவனங்களில் ஒன்றான தாஜ் ஓட்டல் குழுமம் தற்போது துபாயில் சொகுசு ஓட்டல் ஒன்றை பலகோடி செலவில் கட்ட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
துபாயின் பிரபல சுற்றுலா பகுதியான புர்ஜ் காலிபா என்ற இடத்திற்கு அருகில் மிகவும் பிரமாண்டமான சொகுசு ஓட்டல் ஒன்றை கட்ட திட்டமிட்டிருப்பதாகவும், இந்த சொகுசு ஓட்டலில் 296 அறைகளுடன் நட்சத்திர அந்தஸ்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த ஓட்டலில் 16 ஜூனியர் சூட் மற்றும் 15 சொகுசு சூட்களைக் கொண்டதாகவும் புர்ஜ் காலிபா நகரை ஓட்டலில் இருந்தே பார்த்து ரசிக்கும் வகையில் அமைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.