shadow

அமெரிக்கா-ரஷ்யா போராக மாறுகிறதா சிரியா போர்?
syria
ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கும் சிரியா ராணுவத்திற்கு இதுவரை நடைபெற்று வந்த பொர், தற்போது அமெரிக்கா மற்றும் ரஷ்யா போராக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.  ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக சிரியா நாட்டின் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்க ராணுவம் போர் பயிற்சி மற்றும் உதவி அளித்து வருகிறது. இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ள சிரியா அதிபர் பசார் அல் ஆசாத், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலுக்கு உதவும்படி ரஷ்யாவை கேட்டுக்கொண்டார். அவரது வேண்டுகோளுக்கு இணங்கி சிரியாவில் ரஷியா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா பயிற்சி கொடுக்கும் சிரியா நாட்டின் கிளர்ச்சியாளர்கள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்துள்ளது.

நேற்று முன்தினம் ரஷியாவின் 13-வது டிவிஷன் போர்விமானங்கள் சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் உள்ள கான் ஷெய்குன் என்னும் கிராமத்தின் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 24 மணி நேரத்தில் 67 முறை குண்டுகள் வீசப்பட்டன.

இந்த தாக்குதலில் அந்த கிராமத்தில் இருந்தவர்களில் 300 பேர் பலியாயினர். ஆனால், இவர்கள் அனைவரும் அமெரிக்க ஆதரவு கிளர்ச்சியாளர்கள் என்ரு கூறப்படுகிறது. ரஷிய விமானங்கள் கான் ஷெய்குன் கிராமத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கருதி இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேநேரம், தீவிரவாதிகளை அழிக்கிறோம் என்கிற பெயரில் கிளர்ச்சியாளர்கள் மீது ரஷியா குண்டு வீசுவதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்து இருக்கிறது.

Leave a Reply