shadow

15 சிறுவனுக்கு மரணதண்டனை. உயரமான கட்டிடத்தில் இருந்து தூக்கி எரிந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள்
syria
ஹோமோசெக்ஸில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 15 வயது சிறுவனை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் உயரமான கட்டிடம் ஒன்றில் இருந்து தூக்கி எரிந்து மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர். சிரியாவில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிரியாவை சேர்ந்த 15 வயது சிறுவன் Abu Zaid என்பவன் இன்னொரு சிறுவனுடன் ஹோமோசெக்ஸ் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டான். உடனே ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அந்த சிறுவனுக்கு மரண தண்டனை அளித்தனர். அந்த சிறுவனை உயரமான கட்டிடத்தில் இருந்து தூக்கி எரியும் தண்டனை சமீபத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது.

ஐ.எஸ்.ஐ.எஸ் சட்டப்படி ஹோமோசெக்ஸ் செய்பவர்களுக்கு கடந்த சில வருடங்களாக மரண தண்டனை அளித்து வரும் நிலையில் சிறுவன் என்பதால் அந்த தண்டனையில் இருந்து இந்த சிறுவன் தப்பிவிடுவான் என எதிர்பார்க்கப்பட்டதாகவும், ஆனாலும் அந்த சிறுவனுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டதாகவும் சிரியா பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது.

syria3 syria2 syria1

Chennai Today News: ISIS throw 15-year-old teenager off roof for being Gay but the ISIS chief who raped him is let off

Leave a Reply