ஸ்விக்கி, ஜொமைட்டோ மீண்டும் இயங்க அனுமதி: ஆனால் ஒரு நிபந்தனை

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது என்பது தெரிந்ததே. 21 நாட்கள் இருக்கும் இந்த ஊரடங்கு உத்தரவு தற்போது மூன்று நாள் முடிவடைந்து நான்காவது நாளாக உள்ளது

இந்த நிலையில் ஸ்விக்கி, ஜொமைட்டோ போன்ற ஆன்லைன் உணவு நிறுவனங்களுக்கு ஏற்கனவே தடை விதித்திருந்தது என்பது தெரிந்ததே. அந்த தடை தொடர்ந்து வரும் நிலையில் தற்போது தமிழக அரசு ஒரு நிபந்தனையுடன் ஸ்விக்கி, ஜொமைட்டோ ஆகிய நிறுவனங்களுக்கு உணவு டெலிவரி செய்ய அனுமதி வழங்கியுள்ளது

இதன்படி காலை 7.00 மணி முதல் 9.30 மணி வரையிலும் மதியம் 12 மணி முதல் 2.30 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 9 மணி வரையிலும் ஸ்விக்கி, ஜொமைட்டோ நிறுவனங்கள் உணவுகளை டெலிவரி செய்யலாம் என்று அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் டெலிவரி செய்யும் ஊழியர்களின் உடல்நிலையை அந்தந்த நிறுவனங்கள் சோதனை செய்து கொள்ள வேண்டும்

Leave a Reply