shadow

சுவாதியை கொலை செய்த ராம்குமார் ஆடு மேய்க்கும் பொறியாளரா?

swati-murderசென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இம்போசிஸ் ஊழியர் சுவாதியை கொலை செய்த ராம்குமார் செங்கோட்டையில் பிடிபட்டார் என்ற செய்தியை பார்த்தோம். இந்நிலையில் ராம்குமார் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டம் பெற்றவர் என்றும் ஓய்வு நேரங்களில் ஆடு மேய்ப்பவர் என்றும் தெரிய வந்துள்ளது.

சுவாதியை கொலை செய்தது ராம்குமார் என்பது அவருடைய தந்தை உள்பட குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்திருப்பதாகவும் அதனால் செங்கோட்டை சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ராம்குமாரின் தந்தை மற்றும் தாயாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

சுவாதி மீது ராம்குமாருக்கு ஒருதலைக்காதல் ஏற்பட்டதாகவும் தன்னுடைய காதலை சுவாதி ஏற்றுக்கொள்ளாததால் சுவாதியை படுகொலை செய்துவிட்டு சென்னை சூளைமேட்டில் இருந்து செங்கோட்டைக்கு சென்றுள்ளார். அவர் தங்கியிருந்த மேன்சன் பதிவேட்டில் இருந்த விலாசத்தின் அடிப்படையில் செங்கோட்டை விரைந்த தனிப்படை போலீசார், நெல்லை செங்கோட்டை அருகேயுள்ள வீட்டில் பதுங்கியிருந்த ராம்குமாரை சுற்றிவளைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply