எஸ்.வி.சேகர் சொல்வது யாரை?

லூசு மாதிரி பேசிகிட்டே இந்திய துரோகியா வாழற திருட்டுத்தனம் உங்களுக்கே சொந்தம் என்று கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன் அவர்களை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

முன்னதாக அருணன் கதிரேசன் தனது டுவிட்டரில், ‘பதிலடி கொடுப்போம்” என்று இந்தியாவை மிரட்டியிருக்கிறார் டிரம்ப். ஒரு சங்கி தலைவரும் பொங்கவில்லையே! இவர்களது தேசம் இந்தியாவா? அமெரிக்காவா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், ‘நீங்கள் நம் இந்திய உப்பு போட்ட சோத்தை திங்கிறவனா இருந்தா பொங்கியிருப்பீங்க. சைனா எச்சி மிச்சம் சாப்டு வாழற ஓசி சோறு பொங்குவிங்களா? . பாரதி சொன்ன கூட்டத்துல ஒருத்தன் பேசற மாதிரி, இல்ல ,சொந்தமா லூசு மாதிரி பேசிகிட்டே இந்திய துரோகியா வாழற திருட்டுத்தனம் உங்களுக்கே சொந்தம்’ என்று கூறியுள்ளார்..

Leave a Reply