எஸ்வி சேகர் டுவீட்

தமிழகத்தில் மே 7-ஆம் தேதி முதல் மது கடைகள் திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு இந்த முடிவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ் வி சேகர் அவர்கள் தனது டுவிட்டரில்
போற உசிரு கொரோனா ல போனா என்ன சரக்கடிச்சு போனா என்ன? எதை தேர்வு செய்வது என்பது உங்கள் கையில்தான் உள்ளது என்று கூறியுள்ளார்

எஸ்வி சேகரின் இந்த கருத்துக்கு பலர் கமெண்ட் அளித்து வருகின்றனர் பொதுவாக தமிழக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் எஸ்.வி சேகர் தற்போது அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply