காங்கிரசுக்கு எதிராக பொய் பிரச்சாரம் செய்யும் டிவி ஊடகங்கள் நசுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று காலை எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து அவருக்கு இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, காங்கிரஸுக்கு எதிராக சில ஊடகங்கள் திட்டம் போட்டு பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றது. அத்தகைய ஊடகங்கள் அடையாளம் காணப்பட்டு நசுக்கப்பட வேண்டும் என்று பேசினார்.

இவருடைய பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த பாரதிய ஜனதா செய்திதொடர்பாளர் சங்கர் பிரசாத் ‘நாட்டின் உள்துறை அமைச்சர் ஒருவரே ஊடகங்களை நசுக்குவோம் என்று கூறுவது அதிர்ச்சியாக இருக்கிறது. ஒரு பொறுப்பான பதவியில் அமர்ந்திருக்கும்போது இதுபோன்று அமைச்சர் ஒருவர் எப்படி பேசலாம்? மத்திய அரசு ஊழலால், மோசமான நிர்வாகத்தால், நாளுக்கு நாள் மக்கள் ஆதரவை இழந்து வருகிறாது. இதற்காக ஊடகங்களை குற்றம் சாட்ட வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.

Leave a Reply