shadow

suryaசூர்யா நடித்த அஞ்சான் திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் எடுக்கப்பட்டது. அந்த படம் தோல்வியடைந்ததை அடுத்து அவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ‘மாஸ்’ படத்தின் படப்பிடிப்பின் ஒரு காட்சி கூட மும்பையில் எடுக்கப்படவில்லை. ஆனால் சூர்யா நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை மீண்டும் படமாக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சூர்யா தற்போது நடித்துக்கொண்டிருக்கும் மாஸ் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் அவர் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். மனம், யாவரும் நலம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் விக்ரம் குமார் இந்த படத்தை இயக்கவுள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக தயாரிக்கப்படவுள்ள இந்த படத்தின் பெரும்பகுதி மும்பையில் உள்ள ஸ்டுடியோவிலும், மும்பையின் பரபரப்பான தெருக்களிலும் படமாக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ என்ற படத்தில் சிறப்புத்தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக விஜய்யின் மனைவி அமலாபால் நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் முக்கிய வேடத்தில் பிந்துமாதவியும் குழந்தைகளும் நடித்து வருகின்றனர்.

Leave a Reply