ஒரே நாளில் சூர்யா, உதயநிதி, பாபிசிம்ஹா படங்கள் ரிலீஸ்
விஜய்யின் ‘தெறி’ படம் ரிலீஸ் ஆவதால்தான் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் தனது ’24’ படத்தை ரிலீஸ் செய்யாமல் இரண்டு வாரங்கள் கழித்து மார்ச் 29ஆம் தேதி ரிலீஸ் செய்ய சூர்யா முடிவு செய்திருந்தார். ஆனால் அந்த தேதியிலும் அவருக்கு போட்டி கடுமையாக ஏற்பட்டுள்ளது.
சூர்யாவின் ’24’ ரிலீஸ் ஆகும் அதே மார்ச் 29ஆம் தேதிதான் உதயநிதியின் ‘மனிதன்’ மற்றும் பாபிசிம்ஹாவின் ‘கோ 2’ ரிலீஸ் ஆகவுள்ளதாக தெரிகிறது.
என்றென்றும் புன்னகை’ இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மனிதன்’ திரைப்படம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘ஜாலி எல்.எல்.பி’ படத்தின் ரீமேக் ஆகும். அதேபோல் பாபிசிம்ஹா, பிரகாஷ்ராஜ், நிக்கி கல்ராணி நடித்துள்ள ‘கோ 2’ திரைப்படமும் விறுவிறுப்பான அரசியல் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மார்ச் 29ஆம் தேதி சூர்யாவுக்கு உதயநிதியும், பாபிசிம்ஹாவும் கடும் போட்டியை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.,
Leave a Reply
You must be logged in to post a comment.