சூர்யா, சமந்தா நடித்த அஞ்சான் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற கவலையையுடன் சேர்த்து சூர்யாவுக்கு மற்றொரு கவலை தற்போது புதிதாக தோன்றியுள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு நண்பனாக நடித்து அசத்தியுள்ள வித்யூத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இதுதான் சூர்யாவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி.
ஃபேஸ்புக் மற்றும் டுவிட்டர் போன்ற இணையதளங்களில் வித்யூத்தான் படத்தின் ஹீரோ என்றும், சூர்யா இரண்டாவது ஹீரோ போல தெரிவதாகவும் பலர் கமெண்ட் கூறியுள்ளனர். ஏற்கனவே துப்பாக்கி படத்தின் விஜய்க்கு கடுமையான நடிப்பு சவால் கொடுத்த வித்யூத், இந்த படத்தில் இன்னும் ஒருபடி மேலே உயர்ந்து ஹீரோவையே டாமினேட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் வித்யூத்துக்குத்தான் வெயிட்டான கேரக்டர் என்பதை பாதி படத்தில் சூர்யா புரிந்து கொண்டதால் இயக்குனரை கட்டாயப்படுத்தி வித்யூத் கேரக்டரை கொலை செய்ய சூர்யா வற்புறுத்தியாக படத்தின் உதவி இயக்குனர் ஒருவர் தனது ஃபேஸ்புக்கில் கருத்து வெளியிட்டுள்ளார். உண்மையில் இந்த கதையில் தளபதி படத்தில் வருவது போல் கடைசியில்தான் வித்யூத் கொல்லப்படுவதாக கதை அமைக்கப்பட்டிருந்தது என்றும் ஆனால் சூர்யாவின் வற்புறுத்தல் காரணமாகவே இடைவேளையிலேயே அவரை கொன்றுவிட்டதாக செய்திகள் அடிபடுகின்றன.
சூர்யாவை யார் என்றே தெரியாத ஒருவர் இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக வித்யூத் கதாநாயகன் என்றும், சூர்யாவை அடியாள் என்றுதான் கூறுவார்கள். இதனால் சூர்யா கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.