shadow

surya and hariவிஷால், ஸ்ருதிஹாசன் நடிப்பில் ‘பூஜை’ திரைப்படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்ட இயக்குனர் ஹரி, நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது அடுத்த படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும், அந்த படம் சிங்கம் 3ஆகவும் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

சூர்யாவை வைத்து ஏற்கனவே ஹரி ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2 ஆகிய நான்கு படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஐந்தாவது முறையாக மீண்டும் இருவரும் இணையவுள்ளனர். இந்த படத்திற்காக சூர்யாவிடம் மூன்று கதைகளை கூறியுள்ளதாகவும், அதில் ஒரு கதை சிங்கம் 3 என்றும் கூறிய ஹரி, சூர்யா தேர்வு செய்யும் கதைக்கு திரைக்கதை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சூர்யா தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் ஹன்சிகா நடிக்கின்றனர். இந்த படத்தை முடித்த பின்னர் சூர்யா, ஹரி இயக்கத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது.

Leave a Reply