சூர்யா இல்லாமல் படப்பிடிப்பை நடத்திய செல்வராகவன்
நடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே. என்ற திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று அவருடைய அடுத்த படமான ‘சூர்யா 37’ படத்தின் பூஜைக்காக லண்டன் சென்றுவிட்டார். இந்த நிலையில் சூர்யா இல்லாமலேயே ‘என்.ஜி.கே’ படத்தின் படப்பிடிப்பை செல்வராகவன் நடத்தி வருகிறார்
சூர்யா 37 படத்தை இயக்குனர். கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன் லால், அல்லு சிரிஷ், சமுத்திரக்கனி, பொம்மன் இரானி நடிக்கின்றனர். சூர்யா ஜோடியாக சாயிஷா ஒப்பந்தமாகி இருக்கிறார்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்திற்கு கேவ்மிக் யு அரி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் பயணம் சம்பந்தப்பட்ட கதையாக உருவாகிறது. நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.