shadow

surya and samantha fighsசூர்யா, சமந்தா நடிப்பில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவர இருக்கும் “அஞ்சான்” திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான “சிக்கந்தர்” படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் சூர்யாவும், சமந்தாவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூர்யா இந்த விழாவில் பேசும்போது, தெலுங்கு படவுலகின் பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் திரைப்படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மிஸ் செய்ததற்காக தான் மிகவும் வருந்துவதாகவும், அதற்கு பதிலாக தற்போது ராஜமவுலி இயக்கிவரும் பாஹுபாலி திரைப்படத்தில் தனக்கு ஒரு சிறு கேரக்டர் கொடுத்தால் அதை மிகவும் மகிழ்ச்சியோடு செய்து கொடுப்பேன் என்றும் பேசினார்.

சூர்யாவுக்கு பின்னர் பேசவந்த சமந்தா, ‘எஸ்.எஸ்.ராஜமவுலி சாரின் படத்தில் நடிக்க எனக்குத்தான் முதல் உரிமை உள்ளது. பாஹுபாலி படத்தில் சூர்யாவுக்கு வாய்ப்பு கொடுத்தால் எனக்கும் கண்டிப்பாக அதே படத்தில் ஒரு வாய்ப்பு தரவேண்டும். ஏனெனில் ராஜமவுலி சாரிடம் வாய்ப்பு கேட்க சூர்யாவை விட எனக்குத்தான் அதிக தகுதி இருக்கிறது. அவருடைய “நான் ஈ” படத்தில் நான் ஏற்கனவே நடித்திருப்பதால் சூர்யாவை விட எனக்கு அதிக தகுதி இருப்பதாக நான் நம்புகிறேன்” என்று சிரித்துக்கொண்டே பேசினார். சமந்தா- சூர்யாவின் செல்ல சண்டையை பார்த்து மேடையில் உள்ளவர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.

Leave a Reply