shadow

‘ஜோக்கர்’ தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் சூர்யா

surya-1ராஜூமுருகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ஜோக்கர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தை தயாரித்த எஸ்.ஆர்.பிரபு அடுத்து தயாரிக்கவுள்ள படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே எஸ்.ஆர்.பிரபு மிக பிரமாண்டமாக தயாரித்துள்ள ‘காஷ்மோரா’ வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கார்த்தியை அடுத்து சூர்யாவை வைத்து படம் தயாரிக்கவுள்ள எஸ்.ஆர்.பிரபு இதுகுறித்து தனது டுவிட்டரில் விளக்கியுள்ளார். அவர் தனது டுவிட்டரில், ‘சூர்யாவின் 36வது படத்தை தயாரிப்பதில் பெருமை கொள்கிறோம். இந்த படம் குறித்த பிற விவரங்கள் மிக விரைவில் வெளிவரும்.

இந்நிலையில் சூர்யாவின் 35வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்க, ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply