shadow

sura-puttu-26-1451126662

தேவையான பொருட்கள்:

சுறா மீன் – 250 கிராம்
தண்ணீர் – 2 கப்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

புட்டு செய்வதற்கு…

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் + தேவையான அளவு
கடுகு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 மற்றும் 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் நன்கு கொதிக்கும் போது, அதில் மீன் துண்டுகளைப் போட்டு 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டி மீன் துண்டுகளை ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மீன் நன்கு குளிர்ந்ததும், அதன் மேல் உள்ள தோல் மற்றும் எலும்புகளை நீக்கிவிட்டு, உதிர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

எண்ணெய் போதவில்லையெனில், சிறிது எண்ணெய் ஊற்றிக் கொண்டு, பின் அதில் உதிர்த்து வைத்துள்ள மீனை சேர்த்து நன்கு மசாலா மீனில் சேரும் வரை கிளறி விட்டு இறக்கினால், சுறா புட்டு ரெடி!!!

Leave a Reply