shadow

நிர்பயா வழக்கு: 4 குற்றவாளிகளுக்கும் மரணதண்டனை! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கொலை வழக்கு குற்றவாளிகள் நான்கு பேர்களுக்கு மரண தண்டனையை சுப்ரீம் கோர்ட் சற்றுமுன்னர் அளித்த தீர்ப்பின் மூலம் உறுதி செய்தது

கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டார். இதில் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி பலியானார்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் என நிரூபணமான அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதில் ஒருவர் இளம் குற்றவாளி என்பதால் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில், முக்கிய குற்றவாளியான ராம்சிங் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து அக்ஷய் தாகூர், வினய் சர்மா, பவன் குப்தா, முகேஷ் ஆகிய 4 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடந்து முடிந்த நிலையில் சற்று முன்னர் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பின்படி குற்றவாளிகள் மீதான ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தின் தூக்கு தண்டனை உறுதிசெய்யப்படுவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது.

Leave a Reply