உடனடியாக சரண் அடையாவிட்டால் கைது? சசிகலாவுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு வருடங்கள் தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, உடனடியாக சரண் அடைய வேண்டும் என்று நேற்றே சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இன்னும் அவர் சரண் அடையவில்லை. மேலும் அவரது தரப்பில் இருந்து சுப்ரீம் கோர்ட்டில் சரண் அடைய இரண்டு வார கால அவகாசம் கேட்கப்பட்டது.
ஆனால் சசிகலா தரப்பு கோரிக்கையை நிராகரித்த சுப்ரீம் கோர்ட் உடனடியாக சசிகலா சரண் அடையாவிட்டால் கைது செய்யப்படுவார் என்று எச்சரித்துள்ளது.
எனவே இன்று மாலைக்குள் சசிகலா பெங்களூரில் சரண் அடைய வேண்டும் என்ற கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.