மகாராஷ்டிரா வழக்கு: மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதால் பரபரப்பு

மகாராஷ்டிர மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக அரசு பதவியேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா கட்சி சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது

இந்த வழக்கு ஏற்கனவே விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று இந்த வழக்கில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை தொடங்கிய இந்த வழக்கின் விசாரணையில் இருதரப்பு வாதங்களும் கேட்கப்பட்டது

பின்னர் இந்த வழக்கின் மீது நாளை காலை 10.30 மணிக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளனர்

இந்த வழக்கில் இன்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு மீண்டும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது அரசியல் கட்சிகளை அதிருப்தி அடையச் செய்தது

இருப்பினும் நாளை காலை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மெஜாரிட்டியை நிரூபிக்க நீதிபதிகள் காலக்கெடு அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply