shadow

cskஐ.பி.எல் போட்டிகளில் மிகவும் பிரபலம் வாய்ந்த அணி என்று கூறினால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி தலைமை வகிக்கும் இந்த அணி இரண்டு முறை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள ஒரு தீர்ப்பில் சென்னை அணியை ஐ.பி.எல் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யலாம் என்றும் அந்த அணியை தகுதி நீக்கம் செய்ய முக்தல் கமிட்டி அறிக்கை ஒன்றே போதுமானது என்றும் உத்தரவிட்டுள்ளது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரகள் முதல் ரசிகர்கள் வரை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்துள்ள உத்தரவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் யார் என்ற் ஆவணங்களைத் தாக்கல் செய்யவும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply