பாலிவுட்டில் தற்போது தயாராகி வரும் ‘மைன் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற படத்திற்கு தடை விதிக்க கோரி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டதாகவும், அந்த மனுவை பரிசீலனை செய்த நீதிபதி, மனுவில் உள்ள கோரிக்கையை ஏற்று படத்துக்கு இடைக்கால தடை விதித்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த மனு மீதான் விசாரணை வரும்22ஆம் தேதி நடைபெறும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
ஃபைசல் சயீப் இயக்கத்தில் திருமதி சரோஜ் தயாரித்துள்ள திரைப்படம் ‘மைன் ஹூன் ரஜினிகாந்த்’ என்ற திரைப்படத்தில் இரண்டு முட்டாள்கள் சேர்ந்து ஒரு மில்லியனரை கடத்தி கொலை செய்வது போன்று காமெடியாக கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தன்னுடைய பெயரை வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஜினிகாந்த், படத்தின் பெயரை மாற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் படக்குழுவினர் படத்தின் பெயரை மாற்ற தயாராகவில்லை.
இந்த படத்தில் வரும் மல்லிகா என்ற கேரக்டர் ரஜினியின் தீவிர ரசிகையாக வருவதாகவும், ரஜினியை அவமரியாதையாக குறிக்கும் வகையில் ஒருகாட்சி படத்தில் இல்லை என்று கூறிய படக்குழுவினர் படத்தின் பெயரை மாற்ற மறுத்தனர். இதனால் தற்போது ரஜினிகாந்த் சார்பில் நீதிமன்றத்தில் மனு கொடுக்கபட்டுள்ளது. இதனால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.