shadow

பாம்பை வீசியவரை பழிவாங்கிய சன்னிலியோன்

சன்னிலியோன் திரைப்பட படப்பிடிப்பில் இருந்தபோது பொம்மை பாம்பை படக்குழுவினர் ஒருவரே அவர் மீது வீசி பயமுறுத்திய சம்பவம் குறித்து நேற்று பார்த்தோம்.

இந்த சம்பவத்திற்கு இன்று சன்னிலியோன் பழிக்கு பழிவாங்கியுள்ளார். பொம்மை பாம்பை வீசிய நபர் நாற்காலியில் உட்கார்ந்து செய்தித்தாளை மும்முரமாக படித்து கொண்டிருந்தபோது இரண்டு கைகளில் இரண்டு சாக்லேட் கேக்குகளை கையில் வைத்திருந்த சன்னிலியோன், அந்த நபரின் இரு கன்னத்திலும் சாக்லேட் கேக்கால் ஓங்கி அடித்தார். இதனால் கேக் முழுவதும் அந்த நபரின் முகத்தில் ஒட்டி பரிதாபமாக காட்சி அளித்தார்.

சன்னிலியோன் கையால் சாக்லேட் கேக் அடி வாங்கிய அந்த நபர் சன்னிலியோனை துரத்த, சன்னிலியோன் அவரிடம் பிடிபடாமல் ஓடும் காட்சியின் வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

Leave a Reply