30 ஆண்டுகளுக்கு பிறகு சூரிய கிரகணம்: தவற விடாதீர்கள்

30 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 26ஆம் தேதி வானில் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றவிருப்பதாகவும், இந்த அரிய நிகழ்வை காண தவற வேண்டாம் என்றும் வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 26ஆம் தேதி காலை 8.36 மணிக்கு தொடங்கும் இந்த சூரிய கிரகணம் காலை 10.30 மணிக்கு முழுமைபெற்று 11.30 மணிக்கு விலகும். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நிகழும் இந்த அற்புதத்தை காண உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

30 ஆண்டுகளுக்கு பின் நிகழும் இந்த அரிய நிகழ்வை காண பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

Leave a Reply