shadow

ஐஎஸ் தீவிரவாதிகளின் தற்கொலை படை தாக்குதல்: ஈராக்கில் 17 பேர் பலி

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாகவும், 28 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கல் செய்தி வெளியிட்டுள்ளன

ஈராக் நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையில் கடந்த சில ஆண்டுகளாக சண்டை நடந்து வருகிறது. இந்த தாக்குதலில் பல அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்து வரும் நிலையில், ஈராக் தலைநகரான பாக்தாத்திலிருந்து தென் கிழக்கு திசையில் கிட்டத்தட்ட 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நஹ்ரவான் மார்க்கெட் பகுதியில் நேற்று காலை 5 தீவிரவாதிகள் உள்ளே நுழைந்துள்ளனர்.

இதுகுறித்த தகவல் அறிந்த ஈராக் போலீசார் உடனடியாக தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிக்கு சென்று பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆனால், 2 தீவிரவாதிகள் தங்களது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இதில், 17 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 28 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Leave a Reply