மணிரத்னம் மகனுக்கு என்ன பிரச்சனை? டுவிட்டரில் பதறிய சுஹாசினி
மணிரத்னம்-சுஹாசினி தம்பதியின் ஒரே மகன் நந்தன் வெளிநாட்டில் அரசியல் குறித்த பட்டப்படிப்பை படித்து வருகிறார். இந்த நிலையில் இத்தாலியில் உள்ள பெலுன்னோ என்ற இடத்தில் நந்தன் தன்னிடம் இருந்த பணம் உள்பட விலையுயர்ந்த பொருளை திருட்டு கொடுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் கையில் சிறிய அளவு கூட பணம் இல்லாமல் இத்தாலியின் வெனிஸ் சதுக்கம் அருகே தவித்தார். மேலும் அவருடைய மொபைல் போனில் பேட்டரியும் இல்லாததால் இதுகுறித்து யாரிடமும் தகவலும் சொல்ல முடியவில்லை
இந்நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த சுஹாசினி உடனே தனது டுவிட்டரில், என் மகனிடம் உள்ள பொருட்களை யாரோ திருடிவிட்டார்கள். யாராவது வெனிஸ் மார்க் சதுக்கம் பக்கம் இருந்தால் உடனே அவருக்கு உதவுங்கள்’ என்று டுவீட் செய்திருந்தார்.
சுஹாசினியின் டுவீட்டை பார்த்த இத்தாலி தமிழர்கள் உடனே நந்தனுக்கு உதவி செய்ததாகவும், இதன்பின்னர் சில மணி நேரத்தில் தன் மகன் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவருக்கு உதவியவர்களுக்கு எனது நன்றி என்று சுஹாசினி மீண்டும் ஒரு டுவீட்டை பதிவு செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.