ஜனாதிபதியுடன் சுப்பிரமணியம் சுவாமி சந்திப்பு: தமிழக அரசியலில் திடீர் திருப்பமா?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசியலில் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருக்கும் நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை நீக்க தினகரன் அணியினர்களும் திமுகவும் தீவிர முயற்சிகள் செய்து வருகின்றன
இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்தே சசிகலாவின் அணிக்கு ஆதரவு தெரிவித்து வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
தமிழக அரசியல் நிலைமை குறித்து இருவரும் ஆலோசித்ததாகவும், வெகுவிரைவில் தமிழக அரசியலில் திடீர் திருப்பம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.