shadow

செல்ல வேண்டிய இடத்துக்கு ப.சிதம்பரம் செல்வார். சுப்பிரமணியம் சுவாமி

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுப்பிரமணியம் சுவாமி ஒரு பேட்டியில் சசிகலாவை அடுத்து யார் சிறைக்கு செல்வார் என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்டபோது, ப.சிதம்பரம், சோனியா காந்தி ஆகியோர்களின் பெயர்களை அவர் கூறினார். அவர் கூறியதை போலவே சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர்களுக்கு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பான வழக்கில் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் இன்று ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோர்களின் வீடுகளில் சிபிஐ சோதனை நடந்து வருகிறது. இந்த நிலையில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, ப.சிதம்பரம் ஆகியோர் மீது எந்தவித நடவடிக்கையும் எப்போது வேண்டுமானாலும் எடுக்க அரசு தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்துக்கு ப.சிதம்பரம் செல்வார் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சற்று முன்னர் கூறியுள்ளார். பல வழக்குகளில் சிதம்பரத்துக்கு தொடர்புள்ளதாகவும், இந்த வழக்குகளில் அதிகளவில் விதிமீறல் நடந்துள்ளதால் தான் அதன் மீது நடவடிக்கை தொடங்கியுள்ளதாகவும், ப.சிதம்பரம் எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்துக்கு விரைவில் செல்வார் என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply