சென்னை மெரீனாவில் நீட் போராளிகள். குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றிய போலீசார்
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் மீண்டும் ஒரு போராட்டம் மெரீனாவில் நடக்கக்கூடாது என்ற அரசின் ரகசிய உத்தரவை அடுத்து சென்னை மெரீனாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பற்றியெறியும் நீட் எதிர்ப்பு போராட்டம் மெரீனாவிலும் பரவிவிட கூடாது என்பதில் போலீஸார் தீவிரமாக இருந்தனர்.
இந்த நிலையில் சில நிமிடங்களுக்கு முன்பு மாணவர்கள் சிலர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று நீட் தேர்வுக்கு எதிராக கோஷமிட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் அங்குள்ள போலீசார் விரைந்து வந்து ஜெயலலிதா சமாதியில் போராட்டம் செய்த மாணவர்களை குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். இதனால் சில நிமிடங்கள் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.