shadow

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நீட்தேர்வு அச்சம் காரணமாக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் ஏற்கனவே இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வி அடைந்து உள்ளார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் நீட் தேர்வு எழுத விண்ணப்பம் செய்துள்ளதாகவும் தெரிகிறது, ஆனால் மீண்டும் தோல்வி அடைந்து விடுமோ என்ற அச்சம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது