ரஷ்யாவில் பயங்கர நிலநடுக்கம். சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது.
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளதால் சேதம் அதிக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
ரஷ்யாவின் எலிஜோவா என்ற பகுதியில் இன்று காலை 153 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிக்டர் அளவில் 7.04 அக உயர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை அங்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த எந்தவித தகவலும் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.