தமிழகத்தில் சூறைக்காற்று அபாயம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தென் தமிழகத்தில் குறிப்பாக குமரி கடல் பகுதியில் 2 நாட்களுக்கு சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும், ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
அடுத்த 2 நாட்களுக்கு குமரிக் கடற்கரைப்பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்திய வானிலை ஆய்வு மையம், மற்ற பகுதிகளில் மீன் பிடிக்க செல்வதற்கு எந்தவித தடையும் இல்லை என அறிவுறுத்தியுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.