shadow

இரத்தக்கண்ணீர் வடிக்கும் சிறுவன். டாக்டர்கள் திணறல்

ஏதாவது ஒரு துன்பம் நேர்ந்தால் இரத்தக்கண்ணீர் வடிப்பதாக கூறுவதுண்டு. ஆனால் 10 வயது சிறுவன் ஒருவன் தினசரி இரத்தக்கண்ணீர் வடித்து வருகிறார். அவருடைய கண்ணீருக்கு காரணம் என்ன என்பது தெரியாமல் டாக்டர்கள் திணறி வருகின்றனர்.

இந்தியாவை சேர்ந்த 10 வயது சிறுவனான அகிலேஷின் கண்களில் இருந்து தினமும் ரத்தம் கசிந்து வருகிறது. கண்ணீரை போல கசிந்து வரும் ரத்தத்தை நிறுத்துவது எப்படி என்பது டாக்டர்களுக்கே புரியாத மர்மமாக உள்ளது. கண்ணீல் இருந்து மட்டுமின்றி காது, வாய், மற்றும் உடம்பின் பல பகுதிகளில் இருந்து இந்த சிறுவனுக்கு ரத்தம் கசிந்து வருகிறாது.

தினசரி 10 முறை இந்த சிறுவனுக்கு ரத்தம் கசிந்து வருவதாகவும், பொதுமக்கள் அல்லது அரசு உதவி செய்தால் வெளிநாட்டுக்கு அழைத்து சென்று சிகிச்சை கொடுக்கவிருப்பதாக அகிலேஷின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply