ஸ்டெர்லைட்டுக்கு எதிராக லண்டனை அடுத்து வாஷிங்டனிலும் போராட்டம் செய்த தமிழர்கள்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் கடந்த ஐம்பது நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் லண்டனில் உள்ள ஸ்டெர்லைட் உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகம் முன் திரண்ட லண்டன்வாழ் தமிழர்கள் ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்று கோஷமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பாக ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அங்கு வாழும் தமிழர்கள் பதாகைகள் ஏந்தி போராட்டம் நடத்தினர். இதில் அமெரிக்க வாழ் தமிழர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனால் வாஷிங்டன் நகரில் சிறிது நெரெஅம் பரபரப்பு ஏற்பட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.