shadow

பிரபல எழுத்தாளரை டுவிட்டரில் பிளாக் செய்த டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே அவரை ஊடகங்கள் உள்பட பலர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தன்னை விமர்சனம் செய்பவர்களுக்கு எதிராக டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்பைத் தொடர்ந்து விமர்சித்ததால் டுவிட்டரில் இருந்து தன்னை பிளாக் செய்துவிட்டதாக பிரபல அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபன் கிங் தெரிவித்துள்ளார். ‘இட்’ மற்றும் ‘ஃபைர்ஸ்டார்ட்டர்’ என்னும் திகில் நாவல்களின் எழுத்தாளர் ஸ்டீபன் கிங். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னர் இருந்தே ட்ரம்பைத் தொடர்ந்து விமர்சித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த பிப்ரவரி மாதம், ”ட்ரம்ப் அமெரிக்க – ஆஸ்திரேலிய உறவை நாசமாக்குகிறார் என்றும் அவர் உணர்ச்சி வசப்படும், மோசமான மனப்பான்மை கொண்ட முட்டாள்” என்றும் தனது டுவிட்டரில் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், ‘அமெரிக்க அதிபர் ட்ரம்பைத் தொடர்ந்து விமர்சித்ததால் ட்விட்டரில் என்னை பிளாக் செய்துவிட்டார்’ என்று எழுத்தாளர் ஸ்டீபன் கிங் தெரிவித்துள்ளார். டிரம்ப் தங்களது ட்விட்டர் கணக்குகளை பிளாக் செய்துவிட்டார் எனவும், அவற்றை உடனே அன்பிளாக் செய்யவேண்டும் என்றும் வழக்கறிஞர்களான இரண்டு டுவிட்டர் பயனாளிகள் வெள்ளை மாளிகைக்குக் கடிதம் வாயிலாகக் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இதுகுறித்துப் பதிலளிக்க வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply